விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை இளைஞரின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற "பசுமை கணபதி"

இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் பசுமையான முறையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடுவதற்காக 25 வயதான கோவை இளைஞர் "பசுமை கணபதி" சிலைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

வடவள்ளியைச் சேர்ந்த எலக்டாரிக் பொறியாளர் ஸ்வரஜித் அலகந்தாவே இந்த புதிய முயற்சியில் இயற்கையை காக்கும் நம் கோவை இளைஞர். பெரும்பாலான பகுதிகளில் விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டிக் கலவையிலான விநாயகர் சிலைகளை பார்த்தே இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு நட்புமிக்க பசுமை கணபதியை தயாரிக்க தூண்டியது என்கிறார் அந்த இளைஞர்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் பிளாஸ்டிக் கலவையினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வரும் சூழலில் களிமண் உள்ளிட்ட இயற்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட எனது பசுமை கணபதி சிலைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. "எங்களது இந்த கணபதி சிலைகள் ஒன்று 40 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை என அளவிற்கு தகுந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, வழிபாட்டிற்குப் பின் பொது இடங்களில் புதைத்தாலோ அல்லது நீர் நிலைகளில் கரைத்தாலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



"விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. நீரில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து அரசுத் தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாரிஸ் பிளாஸ்டர் மற்றும் ரசாயன வண்ணப்பூச்சுகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பெரிய அளவிலான சேதங்களை இயற்கைக்கு ஏற்படுத்தி வருகிறது. களிமண் பயன்படுத்தி நமது பண்டைய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பசுமை கணபதி மக்கும் தன்மை கொண்டது. அதனால் நகரம் முழுவதும் களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது" என்கிறார் ஸ்வர்ஜித்.

இயற்கையை மாசுமடுத்துவதை யாரும் விரும்புவது இல்லை. இருப்பினும் ஒரு சில செயல்களால் நம்மை அறியாமல் பல்வேறு முறைகளில் இயற்கையை சீரழித்து வருகிறோம். அதனை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வருட விநாயகர் சதுர்த்தியை எவ்வித தீங்கும் இன்றி நல்ல முறையில் சுற்றுச்சூழல் நட்புடன் கொண்டாடுவோம்.

ஸ்வரஜித் அலகந்தின் "பசுமை கணபதி"யினை வாங்கி பயனடைய விரும்புவோர் 9655667775 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பசுமை கணபதியை வாங்கி மகிழலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...